அம்மா
உன் பனிக்குடம்
உடைந்ததால்
அழுதேனன்று
பிறந்தது என்
முதல் கண்ணீர் !
அன்றிலிருந்தே
தொடங்கியது
என் கண்ணிரால்
எல்லோர்க்கும்
சந்தோசம்
என் மன கண்கள்
காட்ட மறுகின்றன
நான் உனக்காய்
முதன் முதலில்
அழுத காட்சியை !
உதிரத்தில்
உதித்த சூரியனாய்
உன்னருகில்
படுத்திருந்து
உன் ஒருபகுதி
உதிரத்தில்
உயிர் வளர்த்தேன் !
பசியால்
சுன்டிய உதிரத்தில்
படந்த ஆடையை
என் முகம் அடிக்கடி
அணிந்துகொள்ளும்
அதற்காய்
பால்பசுவிடம்மும்
பாவியானாய் !
எனைசுமக்க
நீ பட்ட
காயங்களை
அடிவயிற்றில்
சேமித்தாயோ
வெள்ளி தழும்புகளாய் !
உன்னை தாயாய்
பெற்றுக்கொள்ள
என்ன பாக்கியம்
செய்தேனோ !
தாயே
உன்னை படைத்த
கடவுளிடம்
நான் சொல்வேன்
என்னை படைத்த
கடவுள் நீயேன்று !
Subscribe to:
Posts (Atom)