அன்பே
நானோ கருப்பு
நீயோ சிவப்பு
கருப்பும் சிவப்பும்
சேர்வதில் ஒரு
சிறப்பு !
அதில் ஏன்? உனக்கு
வெறுப்பு !
நான் என்
கருவிழியால் உன்னை
பார்க்கும்போதெல்லாம்
உன்னுள் பரபரப்பு!
சில நேரம்
உன்கையில்
செருப்பு!
அதை நினைகையில்
தனிமையிலும்
சிரிப்பு !
உன் பனிக்குடம்
உடைந்ததால்
அழுதேனன்று
பிறந்தது என்
முதல் கண்ணீர் !
அன்றிலிருந்தே
தொடங்கியது
என் கண்ணிரால்
எல்லோர்க்கும்
சந்தோசம்
என் மன கண்கள்
காட்ட மறுகின்றன
நான் உனக்காய்
முதன் முதலில்
அழுத காட்சியை !
உதிரத்தில்
உதித்த சூரியனாய்
உன்னருகில்
படுத்திருந்து
உன் ஒருபகுதி
உதிரத்தில்
உயிர் வளர்த்தேன் !
பசியால்
சுன்டிய உதிரத்தில்
படந்த ஆடையை
என் முகம் அடிக்கடி
அணிந்துகொள்ளும்
அதற்காய்
பால்பசுவிடம்மும்
பாவியானாய் !
எனைசுமக்க
நீ பட்ட
காயங்களை
அடிவயிற்றில்
சேமித்தாயோ
வெள்ளி தழும்புகளாய் !
உன்னை தாயாய்
பெற்றுக்கொள்ள
என்ன பாக்கியம்
செய்தேனோ !
தாயே
உன்னை படைத்த
கடவுளிடம்
நான் சொல்வேன்
என்னை படைத்த
கடவுள் நீயேன்று !
காக்கைகும்
நரிக்கும் கல்யாணம்
ஆனந்த கண்ணீர்
உன் எச்சில்
மட்டும் இனிக்குதே
தேனீ
எவனுக்கோ
தாகம் தீர்த்தவள்
அவள் தாகம் தீர
இன்று கண்ணீர்
குடிகிறாள்!
எதிர்கால
இந்தியாவின்
காலகண்ணாடியாக
இன்றைய நமது
நகர பேருந்துகள்