கடி கவிதை














  அன்பே
  நானோ கருப்பு
  நீயோ சிவப்பு
  கருப்பும் சிவப்பும்
  சேர்வதில் ஒரு
  சிறப்பு !
  அதில் ஏன்? உனக்கு
  வெறுப்பு !
  நான் என்
  கருவிழியால் உன்னை
  பார்க்கும்போதெல்லாம்
  உன்னுள் பரபரப்பு!
  சில நேரம்  
  உன்கையில்
  செருப்பு!
 அதை நினைகையில்
 தனிமையிலும்
 சிரிப்பு !

அம்மா








உன் பனிக்குடம்
உடைந்ததால்
அழுதேனன்று
பிறந்தது என்
முதல் கண்ணீர் !

அன்றிலிருந்தே
தொடங்கியது
என் கண்ணிரால்
எல்லோர்க்கும்
சந்தோசம்


என் மன கண்கள்
காட்ட மறுகின்றன
நான் உனக்காய்
முதன் முதலில்
அழுத காட்சியை !

உதிரத்தில்
உதித்த சூரியனாய்
உன்னருகில்
படுத்திருந்து
உன் ஒருபகுதி
உதிரத்தில்
உயிர் வளர்த்தேன் !

பசியால்
சுன்டிய உதிரத்தில்
படந்த ஆடையை
என் முகம் அடிக்கடி
அணிந்துகொள்ளும்
அதற்காய்
பால்பசுவிடம்மும்
பாவியானாய் !


எனைசுமக்க
நீ பட்ட
காயங்களை
அடிவயிற்றில்
சேமித்தாயோ
வெள்ளி தழும்புகளாய் !

உன்னை தாயாய்
பெற்றுக்கொள்ள
என்ன பாக்கியம்
செய்தேனோ !

தாயே
உன்னை படைத்த
கடவுளிடம்
நான் சொல்வேன்
என்னை படைத்த
கடவுள் நீயேன்று !

ஹைகூ


   காக்கைகும்
   நரிக்கும் கல்யாணம்
   ஆனந்த கண்ணீர்

ஹைகூ


  உன் எச்சில் 
  மட்டும் இனிக்குதே 
  தேனீ

ஏமாற்றம்

   எவனுக்கோ
   தாகம் தீர்த்தவள் 
   அவள் தாகம் தீர
   இன்று கண்ணீர் 
   குடிகிறாள்!

காலக்கண்ணாடி

    எதிர்கால
    இந்தியாவின்
    காலகண்ணாடியாக
    இன்றைய நமது
    நகர பேருந்துகள்